குழந்தைகளின் நடத்தைகளை நாம் எவ்வாறு அணுகுவது? – ஒரு பொது மருத்துவரின் பார்வை
How do you deal with behavioural issues in early childhood? – A General practitioner’s view– ஏழு வயதுக் குழந்தை அவருக்குக் கூச்ச சுபாவம் (shy) அதிகம். பேசுவதற்குச் சற்றுச் சிரமப்படுவார். பள்ளியில் ஆசிரியர்கள் இதனை அவதானிக்க ஆரம்பித்தனர். நாளடைவில் அவரின் உடலில் மேலும் சில உடல் உபாதைகளுக்கான (physical symptoms) சில அறிகுறிகளும் ஏற்படத்தொடங்கின. அடிக்கடி தலைவலி வந்தது. குமட்டல் எடுத்தது. ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் […]
மேலும் பார்க்க
பிள்ளை வளர்ப்பு – ஒரு பிள்ளையின் பார்வையில்
நாம் வாழும் சமுதாயம் மிக விரைவாக வளர்ந்து வருகிறது. நவீனமயமாக்கத்தினால் மருத்துவம், விஞ்ஞானம், அன்றாட வாழ்க்கைமுறைகள் போன்றவை மாறிக்கொண்டு வருகின்றன. இப்பட்டியலில் குழந்தை வளர்ப்பும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பு ஒரு மனிதனுடைய வாழ்வில் மிக மிக முக்கியமான விடயமாகும். ஒரு மனிதனது ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அனைத்தும் தனது பெற்றோர்களது வளர்ப்பிலிருந்து தெரிகிறது. எனவே பிள்ளை வளர்ப்பு காலத்தின் வளர்ச்சியால் எப்படி மாறியுள்ளது என்பதைப் பார்ப்போம். கடந்த காலம் என்னைப்போன்ற […]
மேலும் பார்க்க
பறத்தல் இனிது
எங்கள் வீட்டு முன்றிலில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு குருவிகள் கூடு கட்டும். தேடித் தேடி தும்பும் தடிகளும் கொண்டுவந்து கூட்டை அமைக்கும். பெண் குருவி முட்டையிட்டு அடை காக்கும்போது ஆண் உணவு தேடிக்கொண்டுவரும். குஞ்சுகள் பொரித்தபின்னர் இரண்டு குருவிகளுமே அலைந்து திரிந்து உணவு தெரிந்து வந்து குஞ்சுகளுக்குப் பரிந்து ஊட்டும். பிறகு பறக்கச் சொல்லிக் கொடுக்கும். பின்னர் ஒரு நாள் குஞ்சுகள் தங்கள் கூட்டை விட்டுப் பறந்தே போய்விடும். திரும்பி […]
மேலும் பார்க்க
“Long walk to emancipation” – the struggles of the cursed generation
Before I begin, I would like to acknowledge that I am a child of migrants who crossed the seas and came to a nation providing futuristic opportunities, seeking to live a relatively better life, whatever that might look like for any individual. This however does not take away from the […]
மேலும் பார்க்க
பெற்றோரின் அதீத பாதுகாப்பு அவசியமா?
என்னுடைய நண்பனின் பெயர் குகன். குகன் ஒரு புத்திசாலி. அவனை நான் முதல் முதலாக பத்து வயதில்தான் சந்தித்தேன். பாடசாலையில் எந்தச் சோதனை வந்தாலும்கூட குகன் அதில் நூறு சதவீதம் பெறுவதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவனின் பெற்றோர்கள் எப்போதும் மிகக் கண்டிப்பாக இருப்பதனால் அவனால் எங்களுடன் கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்குப் பெரிதளவில் வர முடியாமல் இருந்தது. நானும் என் நண்பர்களும் அடிக்கடி ஒவ்வொருவரின் வீட்டிற்குச் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால் […]
மேலும் பார்க்க
சிறுவர்களின் பார்வையில் பொன்னியின் செல்வன் பாத்திரங்கள்
பொன்னியின் செல்வன் நாவல் எழுபது ஆண்டுகளாகப் பல தலைமுறைகளைத் தாண்டி, இன்னமும் கொண்டாடப்படும் நாவலாக இருந்துவருகிறது. ஆரமப்த்தில் தொடராக வெளிவந்து, பின்னர் நாவல், மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் மற்றும் ஒலிப்புத்தகம் என்று பல்வேறு ஊடக வடிவங்களைப் பெற்று மக்களைச் சென்றடைந்து வருகிறது. நாவலின் பாத்திரங்கள் தனித்துவமான குண இயல்புகளோடு மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வாசகர்கள் இந்தப் பாத்திரங்களின் இரசிகர்களாக மாறி, யார் பெரியவர் என்று வாதம் செய்யும் […]
மேலும் பார்க்க
ஆசிரியர் தலையங்கம் – இருமொழிக்கூடுகை
வணக்கம். மறுபடியும் ஒரு இளவேனில் இதழோடு உங்கள் அனைவரோடும் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. சிறுவர்முதல் பெரியவர்வரை நாமெல்லாரும் நம் கதைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள இளவேனில் சஞ்சிகை எப்போதும் துணை நின்றிருக்கிறது. இளையோர் ஆக்கங்கள், இளைஞர் கட்டுரைகள், கவிதைகள், பெரியவரின் அனுபவங்கள் என இளவேனில் எமக்குக் கொண்டுசேர்த்த படைப்புகள் ஏராளம். அதன் இன்னொரு நீட்சியாகவே இவ்விதழையும் உங்களிடையே முன்வைக்கிறோம். “யாதும் ஊரே, யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா” ஏறத்தாழ […]
மேலும் பார்க்க