நம்பிக்கை
“சொறி சந்திரு… நாங்கள் இத்துடன் உங்களை வேலையிலிருந்து நீக்குகின்றோம். நான் நிர்வாகத்துடன் பலமுறை பேசிப் பார்த்தேன் ஆனால் …” என்று மென்மையான குரலில் மேலாளர் சொன்னார். அந்த வார்த்தைகள் சத்தமின்றி விழுந்தாலும், சந்திருவின் மனதைக் கிழித்து விட்டது. அவன் மௌனமாக மேலாளரின் கண்களைப் பார்த்தான். அப்போது சில நினைவுகள் அவனைத் தழுவின – மேலாளருடன் சேர்ந்து கடுமையாக உழைத்த தருணங்கள், பாராட்டுப் பெற்ற சந்தோஷங்கள், மற்றும் எதிர்காலம் குறித்துக் கொண்டிருந்த […]
மேலும் பார்க்க
சோழர்களின் வீழ்ச்சி
அன்றைய இரவின் வானம் மர்மத்தாலும், சதியாலும் சூழ்ந்திருந்தது. சோழ சாம்ராஜ்யத்திற்குள் ஆழமாக, பண்டைய கோட்டையின் பிரமாண்டமான மண்டபங்கள் அமைதியாக நின்றன. பேரரசின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரகசிய சதித்திட்டத்தை அந்த மண்டபங்களின் சுவர்கள் எதிரொலித்தன. சுந்தரசோழனின் மகன், மாவீரன் ஆதித்தகரிகாலன் வீரமும் கௌரவமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருந்தான். ஆனால் அதற்குக் கீழ், அவருக்கு நெருக்கமானவர்களின் துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் அவருடைய மனம் குழம்பி இருந்தது. அவர்களில், சோழ நாட்டின் தளபதியும் ஆலோசகரான பெரிய […]
மேலும் பார்க்க
மழலையர் பக்கம்
சொற்சங்கிலி விளையாட்டு- சிறுவர்களின் தமிழ் சொல்லாற்றலை வளர்த்துக்கொள்ளப் பல வழிமுறைகள் இருக்கின்றன. புத்தகங்களை வாசித்தல், மனனம் செய்தல் போன்ற வழிமுறைகள் சிலவேளைகளில் சலிப்பைத் தரக்கூடும். பொதுவாக விளையாட்டின் வழியாக மொழியைக் கற்றுக்கொடுக்கும்போது கற்றல் இலகுவானதாயும், மகிழ்ச்சியானதாயும், மனதில் பதியக்கூடியதாயும் அமைகிறது. அவ்வாறான ஒரு விளையாட்டுத்தான் சொற்சங்கிலி. ஏழுவயது சிறுவனான ஹரிணீவ், தனது ஆறாவது வயதிலிருந்து இந்த விளையாட்டை விளையாடி வருகிறார். சரி இதை எப்படி விளையாடுவது? உங்களுக்குப் பிடித்த ஏதாவது […]
மேலும் பார்க்க
இரவும் கடலும்
நான் எடுத்த முடிவுகளில் எல்லாம் இதுவே முட்டாள்தனமான முடிவு என்று நினைக்கின்றேன். என்னை நச்சரிக்கும் சகோதரங்கள், மச்சான், மச்சாளுடன் ஒரு கடற்பயணமா? அதுவும் 2 நாட்களா? எனக்கு இப்பொழுதே பயண நோய் (sea sickness) வந்துவிட்டது. இப்படி இரண்டு நாட்கள் எப்படிப் போகப் போகிறது?’ என்று யோசித்தேன் ஒரு பகற்பொழுது சலிப்புடனும் எரிச்சலுடனும் கடந்தது. இராப்பொழுதில் எனது மாமா என்னை வெளியே கூப்பிட்டார். அலுப்புடன் சென்றேன். “நான் உனக்கு நட்சத்திரங்களைக் […]
மேலும் பார்க்க
Editorial
Once again, it gives us great joy to engage in a conversation with you through the Ilavenil magazine. One of the major challenges faced by our Tamil diaspora is how to guide our younger generation. Often, the inner struggles of our youth revolve around their longing for acceptance in the […]
மேலும் பார்க்க
முகப்பு
இந்த இதழில் நீங்கள் கடக்கப்போகும் அவளது வாழ்க்கைக்கதையின் கதவுகளை இந்த ஒரு வரி சாவி கொண்டு கண்டுபிடியுங்கள் அவள் தந்தைக்குத் தன்னம்பிக்கை தந்தாள் தத்தெடுத்த நாட்டில் தன்னிடம் தெரியாமல் தடுமாறினாள் அவளிடம் கேட்காமல் வந்த வாழ்க்கையை அவனுடன் தொடங்கினாள் அவனை முழுமையாக அறியுமுன் முழுவதுமாகத் தொலைத்தாள்மறுமுறை வாழ்க்கை அமையாதா என ஏங்கினாள்மாதவிடாய் துயரத்தை யார்துணையுமின்றிக் கடந்தாள்கேட்காமல் வந்த உயிர்க்கொல்லியை அனைவருக்கும் சொல்லி வழியனுப்பினாள்இன்று உங்கள் கைகளில் இளவேனிலாக அவள்!
மேலும் பார்க்க
கங்காருப் பாதை
மெல்பேர்னில் எங்கள் வீட்டுக்குப் பின் புறமான பாதையில் கங்காருப் படத்துடனான வீதிப் பாதுகாப்பு அறிக்கை உள்ளது. பாதையின் இரு புறமும் உள்ள பற்றைக்காடுகளில் வாழும் கங்காருகள் இங்கு பாதையைக் கடக்கக் கூடும். வேகத்தைக் குறைத்து அவதானமாகச் செல்லுங்கள் என்று வாகனம் ஓட்டுபவர்களை எச்சரிக்கை செய்பவை. ஆனால் இந்த அறிக்கையை படிக்க தெரியாத கங்காருக்கள் அடிக்கடி வாகனத்தில் மோதி இறந்து கிடப்பதைப் பார்த்து மனம் இரக்கம் கொள்ளும். நான் பாவம் என்று […]
மேலும் பார்க்க
வாசகர் கடிதங்கள்
ராஜா கருப்பையாபுதிய வடிவில் வெளியாகியிருக்கும் அழகான இளவேனிலின் கலவையான,சுவையான கட்டுரைகளும்,கதைகளும் அட்டை to அட்டை ஒரே மூச்சில் வாசிக்கச் செய்தன. நம்பிக்கையூட்டும் ஆசிரியர் தலையங்கம், இளையோருக்கு ஊக்கமளிக்கும் அவர்தம் கட்டுரைகள், தைத்திருநாளின் தொன்மையை அறிந்து வியக்கச்செய்யும் சங்க இலக்கிய பாடல் சான்றுகளடங்கிய செறிவான பாடும்மீன் ஐயா அவர்களின் கட்டுரை, நாவில் சுவை ஏற்றும் ரகமத் அண்ணாவின் கேபாப் கதை, வண்ண பேதத்தை குழந்தைகளிடம் புகுத்தாதீர் என எடுத்து சொல்லும் கட்டுரை, […]
மேலும் பார்க்க