மரத்தின் வலி
தச்சனின் மகளுக்குத் திருமணம், வசதி படைத்தவன் அல்ல தச்சன். மகளின் மீது கொண்ட பாசத்தால் உலக பணக்காரர்களை விட வசதி படைத்தவன். அவளின் திருமணத்தை நினைத்தவுடன், அவளுக்குப் பரிசாக ஏதேனும் சிறப்பானதை உருவாக்க வேண்டும் என்ற ஆசை, அவரின் நெஞ்சை நிரப்பியது. கட்டில் செய்ய வேண்டி, மரத்தை தேர்ந்தெடுக்க காட்டுக்குள் நுழைந்தான். அது பெரும் அடர்த்தியான காடு இல்லை என்றாலும், பலதரப்பட்ட மரங்கள் நிறைந்து வனப்புடன் காணப்பட்டது. மரங்கள் ஒன்றுக்கொன்று […]
மேலும் பார்க்க
மொய் விருந்து
‘இங்க இந்த இலைக்கு சாதம் வைங்க , உங்களுக்கு குழம்பா , இல்லை ரசமா? நல்லா கேட்டு வாங்கி சாப்புடுங்க. அட நீங்களா, எப்படி இருக்குறீங்க, வீட்டுல வரலையா? இன்னும் கொஞ்சம் பீன்ஸ் வைக்கட்டுமா? சின்ன பசங்களுக்கு கேட்டு வைங்க.’ என்று விருந்து பந்தி ஒரே பரபரப்புடனும், பயங்கர உபசரிப்புடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏசி ஹால் , 250 பேர் அமரக்கூடிய பந்தி அமைப்பு, முக்கியமாக சைவத்திற்கு தனி, அசைவத்திற்குத் தனி […]
மேலும் பார்க்க
சுந்தரர் தாண்டவம்
சுந்தரமல்லன் தன் வீட்டின் பின் இறக்கத்தின் ஓய்வு இருக்கையில் கால் நீட்டி அமர்ந்திருந்தான். அருகில் இருந்து அனல் வீசிக்கொண்டிருந்த வெப்பமாக்கி மெல்பர்ண் குளிருக்கு இதமாக இருந்தது. உடல் மட்டும் ஓய்ந்திருக்க நடுத்தர வயதின் நாய்மனம் ஓயாமல் எண்ண அலைகளில் அலைக்கழிந்துகொண்டிருந்தது. வருகிற மார்கழியோடு ஐம்பத்தைந்து வயதாகப்போகும் மல்லனை நாமும் சற்று மரியாதையோடே விளிப்பது நல்லதென்பதால் இனி அவரை சுந்தரமல்லர் என்றே விளிப்போம். செம்பாட்டு மண்ணும் நல்லதண்ணி ஊற்றுமுள்ள ஒரு விவசாயக் […]
மேலும் பார்க்க
The Cut Between Us
For years the barber shop was seen as the pinnacle of men’s freedom of expression and a safe space for men to talk about how they feel. Historically used by black men as a community space, the growth of the barbershop community alongside the popularisation of black culture and rap […]
மேலும் பார்க்க
மெளனம் கலைவது எப்போதோ?
2025 பங்குனி 16, இளவேனில் வாசகர் முற்றம் நிகழ்ச்சி எனக்குள் எழுப்பிய கேள்விகள்தான் இந்தப் பதிவு. இதழ் 27ன் வாசகர்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்தான் அந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன். வழமையாக அனுபவப் பகிர்வினைத் தொடர்ந்து நமது சமுகத்தில் பேச விரும்பும் ஆனால் பேசப்படாத தலைப்பினைப் பற்றி பேசுவர். அது போலவே இம்முறை, mid life crisis பற்றிப் பேசினர். ஆரம்பித்தபோது, இதுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கு என்று ஆர்வம் […]
மேலும் பார்க்க
ஆசிரியர் தலையங்கம்
மறுபடியும், இளவேனில் சஞ்சிகை மூலமாக உங்களுடன் உரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புலம்பெயர்ந்து வாழுகின்ற நம் தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களில் ஒன்று, நம் இளந்தலைமுறையினரை எப்படி வழி நடத்துவது என்பது. தனியாளாய் நம் இளையவர்களின் அகப்போராட்டம் பெரும்பாலும் தாம் வாழும் சமூகத்தினுடைய அங்கீகாரத்திற்கு ஏங்குவதாகவே உள்ளது. அதற்காகப் பல முகமூடிகளை அணிய முனைவதால் ஈற்றில் அவர்களது சொந்த முகங்களும் மறைக்கப்பட்டுவிடுகிறது. தன் உண்மை முகம் எது என்ற தேடலில் […]
மேலும் பார்க்க
நம்பிக்கை
“சொறி சந்திரு… நாங்கள் இத்துடன் உங்களை வேலையிலிருந்து நீக்குகின்றோம். நான் நிர்வாகத்துடன் பலமுறை பேசிப் பார்த்தேன் ஆனால் …” என்று மென்மையான குரலில் மேலாளர் சொன்னார். அந்த வார்த்தைகள் சத்தமின்றி விழுந்தாலும், சந்திருவின் மனதைக் கிழித்து விட்டது. அவன் மௌனமாக மேலாளரின் கண்களைப் பார்த்தான். அப்போது சில நினைவுகள் அவனைத் தழுவின – மேலாளருடன் சேர்ந்து கடுமையாக உழைத்த தருணங்கள், பாராட்டுப் பெற்ற சந்தோஷங்கள், மற்றும் எதிர்காலம் குறித்துக் கொண்டிருந்த […]
மேலும் பார்க்க
சோழர்களின் வீழ்ச்சி
அன்றைய இரவின் வானம் மர்மத்தாலும், சதியாலும் சூழ்ந்திருந்தது. சோழ சாம்ராஜ்யத்திற்குள் ஆழமாக, பண்டைய கோட்டையின் பிரமாண்டமான மண்டபங்கள் அமைதியாக நின்றன. பேரரசின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரகசிய சதித்திட்டத்தை அந்த மண்டபங்களின் சுவர்கள் எதிரொலித்தன. சுந்தரசோழனின் மகன், மாவீரன் ஆதித்தகரிகாலன் வீரமும் கௌரவமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருந்தான். ஆனால் அதற்குக் கீழ், அவருக்கு நெருக்கமானவர்களின் துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் அவருடைய மனம் குழம்பி இருந்தது. அவர்களில், சோழ நாட்டின் தளபதியும் ஆலோசகரான பெரிய […]
மேலும் பார்க்க
மழலையர் பக்கம்
சொற்சங்கிலி விளையாட்டு- சிறுவர்களின் தமிழ் சொல்லாற்றலை வளர்த்துக்கொள்ளப் பல வழிமுறைகள் இருக்கின்றன. புத்தகங்களை வாசித்தல், மனனம் செய்தல் போன்ற வழிமுறைகள் சிலவேளைகளில் சலிப்பைத் தரக்கூடும். பொதுவாக விளையாட்டின் வழியாக மொழியைக் கற்றுக்கொடுக்கும்போது கற்றல் இலகுவானதாயும், மகிழ்ச்சியானதாயும், மனதில் பதியக்கூடியதாயும் அமைகிறது. அவ்வாறான ஒரு விளையாட்டுத்தான் சொற்சங்கிலி. ஏழுவயது சிறுவனான ஹரிணீவ், தனது ஆறாவது வயதிலிருந்து இந்த விளையாட்டை விளையாடி வருகிறார். சரி இதை எப்படி விளையாடுவது? உங்களுக்குப் பிடித்த ஏதாவது […]
மேலும் பார்க்க
இரவும் கடலும்
நான் எடுத்த முடிவுகளில் எல்லாம் இதுவே முட்டாள்தனமான முடிவு என்று நினைக்கின்றேன். என்னை நச்சரிக்கும் சகோதரங்கள், மச்சான், மச்சாளுடன் ஒரு கடற்பயணமா? அதுவும் 2 நாட்களா? எனக்கு இப்பொழுதே பயண நோய் (sea sickness) வந்துவிட்டது. இப்படி இரண்டு நாட்கள் எப்படிப் போகப் போகிறது?’ என்று யோசித்தேன் ஒரு பகற்பொழுது சலிப்புடனும் எரிச்சலுடனும் கடந்தது. இராப்பொழுதில் எனது மாமா என்னை வெளியே கூப்பிட்டார். அலுப்புடன் சென்றேன். “நான் உனக்கு நட்சத்திரங்களைக் […]
மேலும் பார்க்க